Showing posts with label கருடாழ்வார் சன்னதி. Show all posts
Showing posts with label கருடாழ்வார் சன்னதி. Show all posts
Friday, 27 March 2009
பெரிய திருவடி
ஸ்ரீரங்கத்தில் கருடாழ்வார் சன்னதியின் பின்புறச் சுவரை ஒட்டியில்லாமல் நடுவிலேயே கருடர் சிலை இருக்கிறது . அவரது பின்புறம் மற்றொரு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. கருடரின் பின்னால் ஒரு ரகசிய அறை இருப்பதாகவும், அதில் தங்கம், வெள்ளி என்று பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வதந்தி. அந்த வதந்திக்கு வலு சேர்ப்பதுபோல் ஜன்னல்களின் இடைவெளிகளும்கூட அடைக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின்போது, கோயில் நகைகளைக் காப்பாற்ற அங்கே பொக்கிஷங்கள் குவிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.ஆஜானுபாகுவான கருடரைக் காணும் போதெல்லாம் அவர் பின்னால் உள்ளதாக கூறப்படும் பொக்கிஷம் நினைவுக்கு வருகிறது.மருந்தை சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்ற கட்டளை போல.கருடாழ்வார் சன்னதிக்கு முன் உள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள நாயக்கர் சிலைகளின் பினிஷிங் அப்பா...தொட்டுப்பார்க்கத் தூண்டும்.
Subscribe to:
Posts (Atom)
