Showing posts with label கற்பூர படியேற்ற சேவை. Show all posts
Showing posts with label கற்பூர படியேற்ற சேவை. Show all posts

Thursday, 8 December 2011

கற்பூர படியேற்ற சேவை

நேற்று காலை 5.45 க்கு நம்பெருமாளின் கற்பூர படியேற்ற சேவை கண்டேன்.நீலக் குல்லாயுடன் நம்பெருமாள் படியேறும் காட்சி காணக் கிடைத்தது.பெருமாளின் முகம் காணமுடியவில்லை.நான் உள்ளே செல்லும் போது பெருமாள் படியை நோக்கி இருந்தார்.எனவே பக்க வாட்டில் தான் பார்க்க முடிந்தது.இருந்தும் படியேறும் அழகும் கற்பூரப் பொடி தூவும் தருணமும் காணக் கிடத்தது பாக்கியம்.ஸ்ரீரங்கம் மாமிகள் முன்னமே வந்திருந்து படிக்கு நேர் எதிரே இருந்த மேடையில் நின்று கொண்டு நம்பெருமாளை கண்குளிரக் கண்டனர்.எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.information is wealth என்பது எவ்வளவு உண்மை.எனக்குப் பின்னால் கோதை இருந்தாள்.
சேவிசேளா...”
ம் முன் பக்கம் பார்க்க முடியலை”
நான் இப்போதான் வந்தேன் நான் வருவதற்குள் படியேற்ற சேவை முட்ந்து விட்டது” என்றாள்.வெளியே வந்து முரளி காபியில் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அகம் வந்தேன்.முரளி காபி பற்றி தனி பதிவு இட வேண்டும்.ஸ்ரீரங்கம் செல்பவர்கள் முரளி காபி சாப்பிடாமல் வராதீர்கள்.” எனக்கு காபி ,,டீ..எதுவும் பிடிக்காது” என்பவர்களுக்கு நான் சொல்வது ஒருமுறை முரளி காபியை சாப்பிட்ட பிறகு சொல்லுங்கள் என்பது தான்.அந்த காலை நேரத்திலேயே அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்கள் என ஏக கூட்டம். நேற்றைய கைசிக புராணம் பெருமாளிடம் படித்து விட்டு பட்டர் ஆரியபடாள் வாசல் முன் அமர்ந்திருந்தார்.சென்ற வருடத்திலிருந்து பிரம்ம ரத மரியாதை நிறுத்தப் பட்டுள்ளது.இந்த வருடம் உண்டா என்று தெரிய வில்லை.அரசும் கோர்ட்டும் ஆலயத்துக்குள் தலியிடாமல் இருப்பது தான் நல்லது எனத் தோன்றுகிறது.

சரி....
கற்பூர படியேற்ற சேவை என்றால் என்ன?