Saturday 21 May, 2011

சக்கரத்தாழ்வார் சன்னிதி தரைத்தளம் மாற்றம்


இன்று காலை 5.30 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டோம்.சமயபுரம் சென்று மாரியம்மன் தரிசனம். மனைவிக்கு வாரக்கட்டளை.இது இரண்டாம் வாரம்.25.00 கியூவில் தரிசனம் முடித்தோம்.வீட்டிலிருந்து பற்த்துச் சென்ற மனோரஞ்சிதம் பூவினை அம்மனுக்கு மார்பில் சூட்ட காண கண்கோடிவேண்டும். முடித்து ஸ்ரீரங்கம்.கொள்ளிடக்கரை யோரமாக திருவரசுகள் நிறைந்த சாலை வழியே வடக்கு வாசல்

வந்தடைந்தோம்.வாசுதேவர்,ராமர்,ஆண்டாள்,கீழகோதண்டராமர்,சுக்ரவார கிருஷ்ணன்,என சேவை முடித்து நேரே சக்கரத்தாழ்வார் சன்னிதி.7.30 க்குள் மூடி விடுவார்கள்.சக்கரத்தாழ்வார் சன்னிதியில் கடந்த மூன்று வாரமாக தரைத்தள கற்கள் பெயற்து எடுக்கப்பட்டு புதிய கற்கள் போடப்பட்டு வருகிறது.கற்களுக்கு அடியில் ஆற்று மண்ல் .பாதி கல்லிலிம் பாதி மணலிலும் தான் பிரகாரம் சுற்றமுடிந்தது.முடித்து உடையவர் சன்னிதி.( உடையவர் சன்னிதி போகும் வழியில் உள்ள இலவசக் கழிப்பறை நன்கு பராமரிக்கப் பட்டு வருகிறது).அங்கிருந்து தாயார் சன்னிதி.ஒரே ஓட்டம்.8.00 மணிக்கு நடை சாற்றப்பட்டு விடும்.நல்ல தரிசனம்.பஸ்ஸ்டாண்டு குறிஞ்சி ஹோட்டல் வந்து காலை சிர்றுண்டி முடித்து பசங்களுக்கும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரும் போது மணி 9.00