Sunday 23 August, 2009

சுதை சிற்பம்

இந்த சுதை சிற்பம் ஸ்ரீரங்கம் ரங்கா..ரங்கா கோபுரத்தின் பின்புறம் உள்ளது.அதாவது கோவிலிலிருந்து வெளியே வரும்போது ரங்கா ரங்கா கோபுரத்தில் பார்க்கலாம்.இதை பார்த்தவுடன் ஒரு பாசுரம் நினைவிற்கு வருகிறதா?


வாய் அவனை அல்லது வாழ்த்தாது: கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா; பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்-
காணா கண், கேளா செவி
.

ஸ்ரீ பொய்கை ஆழ்வார்



நாயக்கர் காலத்து ஓவியங்கள்



உற்று நோக்குங்கள்..

ஸ்ரீரங்கத்தில் மேலும் சில நாயக்கர் காலத்து ஓவியங்கள்.

காவிரி




இன்றைக்கு காவிரி இருகரையும் புரண்டு ஓடுகிறது

Saturday 8 August, 2009

பக்தர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில்

இன்று சக்கரத்தாழ்வார் சேவை,தாயார் சேவை செய்தாயிற்று. அரங்கனை காண ஏகக்கூட்டம் .பிரதட்சிணம் மட்டும் செய்து விட்டு வந்தோம். தாயார் சன்னதியில் வழங்கப்படும் மஞ்சளைக் கொண்டு ஒரு பெண் சன்னதிக்குள்ளேயே சுவரில் நாமம் வரைந்து கொண்டிருந்தார்.இதைவிட அரங்கன் சன்னதி சுற்றில் சேனை முதலியாருக்கு பக்கவாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று ரங்க விமான கலச தரிசனம் பார்க்க அடையாளமாக தரையில் பித்தளை தகடு பதிக்கப்பட்டிருந்தது.யாரோ ஒரு புண்ணியவான் அதன் மீது கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளார்.தகடு உறுகி இப்போது கருத்துப்போய் இருக்கிறது.பக்தர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.


பிரசாதம்: வடை,புட்டு,புளியோதரை, தோசை வித் ஊறுகாய்.
அத்தனையும் நானே சாப்பிடவில்லை.குழந்தைகளுக்கு பார்சல்.நானும் ஜயந்தியும் வடை ,புளியோதரை,தோசை மட்டும் சாப்பிட்டோம்.
காவேரியில் இரு கரையும் தண்ணீர்.சுபிட்ஷம்.