Monday 28 December, 2009

வைகுண்ட ஏகாதசி

இன்று வைகுண்ட ஏகாதசி. காலையிலே 4.45 க்கு நம்பெருமாள் சொர்க்க வாசலை சர்ப்பகதியிலே கடந்து வந்ததை ஜெயா டி வி யிலே பார்த்தேன்.வருடா வருடம் இன்றய தினத்தில் ஸ்ரீரங்கம் செல்கிறேன்.சொர்க்கவாசல் மிதிக்கிறேன்.நம்பெருமாளை ஆயிரம்கால் மண்டபத்தில் சேவிக்கிறேன்.அடுத்த வருடமாவது நம்பெருமாளுடன் சொர்க்க வாசலை மிதிக்க வேண்டும்.பெருமாளின் அருள் வேண்டும்.சரி இன்றய நிகழ்வுக்கு வருவோம்.வடக்கு வாசல் மற்றும் தெற்கு வாசல் வழியாக என இரன்டு கியூ.நான் காலை 10.30க்கு ஜெயந்தியுடன் கோயில் சென்றேன்.தெற்கு வாசல் கியூ மேற்குவீதி தாண்டி வடக்கு வீதி துவக்கம் வரை நீண்டிருந்தது.வடக்கு வாசல் கியூ நீளம் குறைவு.ஜீயர்மடம் தாண்டி கொஞ்ச தூரம் மட்டும் இருந்தது.10.30க்கு கியூ வில் நின்றோம்.11.30க்கு நாழி கேட்டான் வாசல் அடைந்தோம்.அங்கிருந்து மூன்று பிரிவு.1.கம்பத்தடி ஆஞ்சனேயர் வழியாக முத்தங்கி சேவை முடித்து பரமபத வாசல் வர ரூ.300 க்கானது.2.மேற்கண்ட சேவைக்கான சாதாரண கட்டணம்.(இது கொஞ்சம் நீளம்) 3. நேராக ஒரே ஓட்டம் சோர்க்க வாசல் தான். நாங்கள் 3 வது. சொர்க்க வாசல் தாண்டி ஆயிரம் கால் மண்டபத்தில் நம்பெருமாள் சேவை. ரூ.20 க்கான கியூ.மிக அருகில் 20நிமிடங்களில் நம்பெருமாள் சேவை.சேவை முடித்து மண்ல் வெளியோரம் இருந்த பிரசாத ஸ்டாலில் புளியோதரை,வடை, மைசூர்பா,(விரதம் இல்லை).பிறகு நேராக தாயார் சன்னதி.திவ்ய தரிசனம்.அடுத்த வருடமாவது விரதம் இருக்க வேண்டும்.நம்பெருமாளுடன் சொர்க்க வாசல் மிதிக்க வேண்டும்.

Sunday 18 October, 2009

DIWALI

Glitter Text Generator

Glitter Text Generator

Free Glitter Text Generator

Glitter Text Generator

Glitter Text Generator

Sunday 20 September, 2009

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில்

இன்று நவராத்திரி துவக்கம்.புரட்டாசி சனிக்கிழமை.வடக்கு வாசல் வழியாக தாயார் சன்னதி வந்தடைந்தோம் நானும் நண்பர் மோஹனும்.மணி4.30.தாயார் சன்னதி நடை திறக்கவில்லை.6.00 மணிக்கு புறப்படு.பின்னர் புதிதாக பொன் வேயப்பட்டிருக்கும் கொலுமண்டபத்தில் தாயார் சேவை என தெரிந்து கொண்டோம்.பிரதக்க்ஷணம் வந்தோம்.பிரகாரம் முழுதும் மாயிழைக்கோலம் காவி பார்டரில் அவ்வளவு அழகு.பல மாமிகள் கோல வேலைப்படுகளில் ஈடுபட்டிருந்தனர்.ஒரு பெண் போலீஸ் கூட யூனிபார்முடன் அதில் ஒருவராக இருந்தது ஆச்சரியம்.பெரியபெருமாளை பார்த்துவிடலாம் எனும் பிரயத்தனத்தில் நக்ந்தோம். எவ்வளவு ஆசை?.புரட்டாசி முதல் சனிக்கிழமை கூட்டம் நிரம்பி வழியும் நம் ஆசைக்கு அளவில்லை என நினைத்துக்கொண்டேன்.ஆனால் 50.00 ரூ கியூ வில் டிக்கட் வங்கி நாழிகேட்டான் வாசல் தாண்டி உள்ளே போனதும் கியூ வில் எங்கும் நிற்காமல் நேராக காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலுக்கு அருகில் போய்தான் நின்றோம்.கனவா? நினைவா?.6.00 மணீக்கு நடை சாத்தப்படும் எனச் சொல்லி

வேகவேகமாக பக்தர்கள் சேவை முடிந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.கர்ப்பக்கிரஹம்.ஆஹா என்ன அழகு.பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு.ஆகையால் பாத சேவை இல்லை.ஆபரணங்களும் இல்லை.முன்னால் நம்பெருமாள்.ஜொலிப்பு.மற்ற எல்லா இடங்களையும் விட பெரிய பெருமாளுக்கு முன் இருக்கும் போது நம்பெருமாளின் அழகு கூடுகிறதாகத் தோன்றுகிறது.கிடைத்த சிறு நாழிகையில் எதை பார்ப்ப்து எனத்தெரியாமல் எதையும் முழுமையாக உள்வாங்க முடியவில்லை.எல்லாம் பேரழகு.பிரம்மாண்டம்.நாம் என்ன ஆண்டாளா?
பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதி வந்தோம்.இங்கு நேர் எதிர்.கூட்டம் அதிகம்.5.00 ரூ கியூவே நீண்டிருந்தது.அர்ச்சனை சீட்டு வாங்கி கியூவில் நின்று சேவித்தோம்.
மீண்டும் தாயார் சன்னதி வந்தடைந்தோம்.தாயார் புறப்பாட்டினை எதிர்நோக்கி பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.தாயார் சரியாக 6.30 மணிக்கு புறப்பாடு.கோடியில் நிற்பவர்களுக்கும் காட்சிதரும் தாய்.எனக்கும் காட்சி தந்தாள்.கண்கொள்ளாகாட்சி.கண்ணாடிக்கு அருகே நிறிருந்தோம். தாயார் வடக்கே நேரே கண்ணாடி அருகே வந்து சற்று நேரம் நின்று மீண்டும் மேற்கு நோக்கி திரும்பினார்.அந்த ஒருகணம் எனக்காகவே காட்சி அளித்ததாக உணர்ந்தேன்.நான் இளம் வயதில் லேட்டாக வீட்டிற்கு வந்தாலும் எனக்கான ஒரு பங்கு பலகாரத்தை பத்திரமாக ஒரு கிண்ணத்தில் மூடி வத்திருந்ததை எடுத்துத்தரும் அம்மா மாதிரி.தாயார் எனக்கான சேவை சாதித்த‌ருளினார்.அம்மா...அம்மா.. என வாய்விட்டு கூப்பிட்டேன் .நான் கூப்பிடும் தூரத்தில் தாயார்.என்னை போலவே எல்லோருருக்கும் தாயார் பிரத்யேகமாக காட்சி தந்துள்ளார் என்பது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது.வேளுகுடி கிருஷ்ணன் துணைவி மற்றும் மகனுடன் வந்திருந்ததப் பார்த்தேன்.ஒரு வயதான மாமி தாயார் முகத்தைபார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கைகூப்பி புன்னகைத்ததை மோஹன் காட்டினார்.தாயாருடனேயே பிரகாரம் சுற்றி வந்தோம்.இன்றய பொழுது ந்ல்ல பொழுது.நினைத்துக் கூட பார்க்கவில்லை .தாயார் ,பெரியபெருமாள்,நம்பெருமாள்,சக்கரத்தாழ்வார்,நால்வர் சேவையும் இவ்வளவு சுலபத்தில் கிடைக்குமென்று.
குறிப்பு: பெரிய பெருமாள் மூலவர் ரெங்கநாதர்.
நம்பெருமாள் உற்சவர்.தாயார் சன்னதிவிட்டு வெளிவந்தபோது தேசிகர் சன்னதி தின்ணையில் சர்க்கரை பொங்கல் சுட சுட .தாயார் வெறும் கையுடன் என்ணை அனுப்புவதேயில்லை.தேசிகர் சன்னதி முன் உள்ள தின்ணையும், உடையவர் சன்னதி முன்னுள்ள தின்ணையும், எனக்கு மிகவுக் பிடித்தவை.உட்கார்ந்து பார்த்தால் தான் அதன் சுகம் தெரியும்.

Sunday 23 August, 2009

சுதை சிற்பம்

இந்த சுதை சிற்பம் ஸ்ரீரங்கம் ரங்கா..ரங்கா கோபுரத்தின் பின்புறம் உள்ளது.அதாவது கோவிலிலிருந்து வெளியே வரும்போது ரங்கா ரங்கா கோபுரத்தில் பார்க்கலாம்.இதை பார்த்தவுடன் ஒரு பாசுரம் நினைவிற்கு வருகிறதா?


வாய் அவனை அல்லது வாழ்த்தாது: கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா; பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்-
காணா கண், கேளா செவி
.

ஸ்ரீ பொய்கை ஆழ்வார்



நாயக்கர் காலத்து ஓவியங்கள்



உற்று நோக்குங்கள்..

ஸ்ரீரங்கத்தில் மேலும் சில நாயக்கர் காலத்து ஓவியங்கள்.

காவிரி




இன்றைக்கு காவிரி இருகரையும் புரண்டு ஓடுகிறது

Saturday 8 August, 2009

பக்தர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில்

இன்று சக்கரத்தாழ்வார் சேவை,தாயார் சேவை செய்தாயிற்று. அரங்கனை காண ஏகக்கூட்டம் .பிரதட்சிணம் மட்டும் செய்து விட்டு வந்தோம். தாயார் சன்னதியில் வழங்கப்படும் மஞ்சளைக் கொண்டு ஒரு பெண் சன்னதிக்குள்ளேயே சுவரில் நாமம் வரைந்து கொண்டிருந்தார்.இதைவிட அரங்கன் சன்னதி சுற்றில் சேனை முதலியாருக்கு பக்கவாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று ரங்க விமான கலச தரிசனம் பார்க்க அடையாளமாக தரையில் பித்தளை தகடு பதிக்கப்பட்டிருந்தது.யாரோ ஒரு புண்ணியவான் அதன் மீது கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளார்.தகடு உறுகி இப்போது கருத்துப்போய் இருக்கிறது.பக்தர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.


பிரசாதம்: வடை,புட்டு,புளியோதரை, தோசை வித் ஊறுகாய்.
அத்தனையும் நானே சாப்பிடவில்லை.குழந்தைகளுக்கு பார்சல்.நானும் ஜயந்தியும் வடை ,புளியோதரை,தோசை மட்டும் சாப்பிட்டோம்.
காவேரியில் இரு கரையும் தண்ணீர்.சுபிட்ஷம்.

Sunday 5 July, 2009

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 3

01.07.2009 முதல் கோவில் பிரசாதங்கள் விலை ஏற்றம்.
புளியோதரை 6.00
தயிர்சாதம் 6.00
வடை 6.00
சிறிய நெயப்பம் 7.00
பெருமாளே ! கிலோ ஒரு ரூபாய் அரிசி விற்கும் போது இந்த விலை ஏற்றம் தேவையா? திருப்பதி போல பிரசாதங்கள் எல்லாம் இலவசமாக்கப்பட வேண்டும்.அப்போதுதான் வியாபார நோக்கத்தோடு கோடிக்கணக்கில் செய்யப்படும் இந்த ஒப்பந்தங்கள் ஒழியும்.சாதமாவது கொஞ்சம் கூட தரப்படாதோ? ஒரு கரண்டி தான்.ரங்கா....ரங்கா..




Tuesday 19 May, 2009

பிரபாகரன்


என் மொழியில் பேசும்,எழுதும்,படிக்கும் ஒவ்வொருக்கும் இச் செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.எனக்கு அரசியல் தெரியாது.உன்னை உன் இயக்கத்தின் நிறை குறைகளை அலச எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.ஊடகத்தின் வாயிலாகவே உன் உலகத்தைப் பார்த்தவன் நான்.தீவிரவாதம் பற்றியோ,தமிழ் ஈழம் பற்றியோ எனக்கு எந்த ஒரு தீர்மானமான முடிவும் இல்லை.மாவீரனே..நீ சுடப்பட்டு இற‌ந்ததாக பார்க்ககிடைத்த காணொளி என்னை கதற வைத்ததடா...மகனே.
அது உண்மையென்றால் அடுத்த ஜென்மத்தில் எனக்கு மகனாகபிறக்க வேண்டுமடா என் கண்மணியே....



Friday 8 May, 2009

test

test

ஸ்ரீமுஷ்ணம் 2

திருச்சியிலிருந்து காலை 6.30 க்கு பல்லவன் எக்ஸ்பிரஸில் விருத்தாசத்திற்கு காலை 8.30 க்கு வந்து சேர்ந்தோம் நானும் ஜயந்தியும்.அங்கிருந்து ஆட்டோவில் பஸ்நிலையம்.காலை 9.15 க்கு காட்டுமன்னார்குடி போகும் பஸ்ஸில் ஏறி 45 நிமிடத்தில் ஸ்ரீமுஷ்ணம் வந்தடடைந்தோம்.தேர் புறப்பாடு ஆகி வடக்கு வீதியில் இருந்தது.கோயில் நடை சார்த்தியிருந்தது.இருந்தாலும் மூலவரை கிரில் கேட்டிற்கு வெளியில் இருந்து தரிசிக்க முடிந்தது.பிரபலமான புஷ்கரணி, அரசமரம்,சப்த கன்னிகக், தாயார் சன்னதி அனத்தையும் பார்த்துவிட்டு தேரோடும் வீதியை அடந்தோம். ஊர் அழகாக உள்ளது.எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.பச்சைகுத்துதல், ரப்பர் பந்து வியாபாரம்,பலூன்,அல்வா,மருத்துவக்குழு கொட்டகை,ஐஸ் வியாபாரம்,இலவச நீர்மோர், பானகம்,அலம்பிவிடப்பட்ட தார்ச்சாலை,எல்லாமே அந்த மண்ணின் மணத்தோடு.கோவில் மேற்கு பாத்து இருக்கிறது.வடக்கு வீதி திருப்பத்தில் தேர் இருந்தது.தேர் நகரும் போது ஆஹா...என்ன அழகு.தேரில் மாங்காய், தேங்காய், ஈச்சங்காய் என குலை குலையாய், தோரணங்கள்.குழந்தைகளை தேரில் ஏற்றி பெருமாளிடம் காட்டி இறக்கி விடும் வழக்கம் உள்ளது.நிறைய பெற்றோர்கள் சிறு குழந்தைகளை அவ்வாறு தேரில் ஏற்றி இறக்கியவாறு இருந்தனர்.தெரில் பெருமாள் தரிசனம் செய்துவிட்டு,தம்பி ஹரியுடன் எனது அத்தை பையன் சிவாண்ணா அகத்திற்கு சென்று அருமையான மதிய உணவு.2.30 க்கு கிளம்பினோம்.தேர் இன்னும் கிழக்கு வீதியை தாண்டவில்லை,தம்பி ஹரி அதற்கு சொன்ன காரணம் விசித்திரமாக இருந்தது.கீழ வீதியில் ஒரு மோர்காரியிடம் பெருமாள் கடன் வாங்கிவிட்டாராம் அவளுக்கு பயந்து மெதுவாக வருவாராம்.சுவாரசியமாகத்தான் இருந்தது.விருத்தாசலம் வந்து 3.50 மணிக்கு வைகை பிடித்து ஸ்டாண்டிங்கில் திருச்சிக்கு 5.50 க்கு வந்து சேர்ந்தோம்.

Wednesday 6 May, 2009

ஸ்ரீமுஷ்ணம் தேர்

நாளை 07.05.2009 ஸ்ரீமுஷ்ணம் தேர்.வாய்ப்பு இருப்பவர்கள் சென்றுவரலாம்.சென்று வந்தபிறகு அதை பற்றிய பதிவுகளை எழுதலாம் என உத்தேசம்.அடியேனுக்கு அனுக்கிரஹம் வேணும்.
ஸ்ரீமுஷ்ணம் பற்றிய சில வலைப்பதிவர்களின் பதிவிற்கு கீழே லிங்க்.

http://maduraiyampathi.blogspot.com/2009/03/blog-post.html

http://www.venkatarangan.com/blog/CommentView,guid,f2040b52-0a35-4b89-9e9b-9bb7e3958ec2.aspx

Sunday 12 April, 2009

ஸ்ரீர‌ங்க‌ம் சேர்த்தி 2



http://srirangapankajam.com/
2009 ம் வ‌ருஷ‌ ஸ்ரீர‌ங்க‌ம் சேர்த்தி ப‌ட‌ம் இங்கே.மேலே க‌ண்ட‌ லிங்க் லிருந்து( ஸ்ரீரங்கபங்கஜம்) எடுத்த‌து

Friday 10 April, 2009

ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி



08.04.2009 இன்று பங்குனி உத்தரம்.ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி.மாலை 3.00 மணிக்கே கியூ வில் நின்று விட்டோம்.3.30 க்கு ரூ.150/ க்கான கியூ வை திறந்து விட்டார்கள்.ஒரே தள்ளு முள்ளு தான்.தாயாரையும் பெருமாளையும் ஒரு சேர பார்க்கும் போது ஆஹா...என்ன ஒரு பாக்கியம்.தாயார் சன்னதியில் நுழைந்து வில்வமரம் வழியாக சேர்த்தி மண்டபம் ஏறி சேவித்து விட்டு கீழிரங்கி வசந்த மண்டபத்துள் நுழைந்து பக்கவாட்டு கதவு வழியாக நந்தவனம் வந்து சக்கரத்தாழ்வார் சன்னதி அடைகிறது கியூ.சக்கரத்தாழ்வார் சன்னதியில் மைசூர்பா,ஜாங்கிரி என ஒரே ஸ்வீட் கூடைகள்.வயதான மாமிகள் பாவம் ரொம்ப சிரமம்.150 ரூ கியூ வில் ஒரு பாட்டி இன்னொரு பாட்டியிடம் சொன்னது" போன வருஷம் 50 ரூ இந்த வருஷம் 150 ரூ இன்னியிலேந்து ஒரு நாளுக்கு ஒரு ரூபா போட்டுண்டு வந்தா கூட அடுத்த வருஷத்துக்கு சேர்த்தி சேவைக்கு ஆகிவிடும்" என்ன ஒரு கணக்கு? கோயிலொழுகு 5 ம் பாக‌ம் இன்று ஸ்ரீரங்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.500 ரூ.இந்த இரண்டு நாட்களில் மட்டும் வாங்குபவர்களுக்கு 400 ரூ.இதைப்பற்றி தனி பதிவு எழுதவேண்டும்.

இன்றய பிரசாதம்: புளியோதரை வடை

தகவல்: தாயார் முகத்தில் என்றைக்கும் விட இன்று ஒரு பூரிப்பு என்னால் உணர முடிந்தது.பிரமையோ என்று தோன்றியது. ஜயந்தியும் அதையே சொன்னாள்.

எச்சரிக்கை: பெருமாள் அருகில் சேவிக்கும் போது பூணல் போட்ட தடிமனான கருப்பு அய்யங்காரை சேவார்த்திகளை பிடித்து தள்ளுவதற்காகவே நிறுத்தியிருக்கிறார்கள்.ஆண் பெண் சிறியவர் பெரியவர் வித்தியாசமில்லாமல் மனுஷன் பிடித்து தள்ளுகிறார் .
படம் இன்று எடுக்கப்பட்டதல்ல.

Sunday 29 March, 2009

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 2

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 228.03.2009 இன்று காலை வேறு முக்கியமான அலுவல் இருந்ததால் ஸ்ரீரங்கம் செல்வதை மாலை தள்ளி வைத்தேன்.7.45 க்கு கோவிலுக்குள் சென்றேன்.சக்கரத்தாழ்வார், பெரிய பெருமாள்,தாயார், சேவை முடிய 9.15 ஆகிவிட்டது.நம்பெருமாள் உபய நாச்சியாருடன் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருந்தார்.காலை நேரத்திதைவிட மாலையில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஜன நெருக்கடி அதிகம்.காலைவீசி நடக்க முடியாது.சரியாக 9.00 மணிக்கு ஆரியபடாள் வாசல் உள் அனுமதிக்கப்படுவதில்லை.விவரம் தெரிந்தவர்கள் சரியாக எங்கு சுற்றினாலும் 8.30 க்கு ஆரியபடாள் வாசலுக்குள் சென்று விடுகிறார்கள்.8.50 க்குள் பெருமாள் சேவை முடித்து ஓட்டமாக தாயார் சன்னதி ஒடி தாயார் சேவையையும் முடித்து விடுகிறார்கள்.9.00 மணிக்கு தாயார் சன்னதி நடை சாத்தப்படும்.அடியேனும் இந்தமுறை அவ்வாறே செய்தேன்.அரவணை என்பது ஒரு பிரசாதம்.இரவு தாயார் சன்னதியிலிருந்து 9.30 மணிக்கும் , பெருமாள் சன்னதியிலிருந்து 10.00 மணிக்கும் நைவேத்யம் முடிந்து வரும்.பிரசாத ஸ்டாலுக்கு பின் உள்ள வாயில் உள்ளே சென்றால்(ஸ்ரீ பண்டாரம் என்று பெயராம் http://mykitchenpitch.wordpress.com/2007/06/28/aravanai/>ஜெயஸ்ரீ பதிவிலிருந்து) இந்த நேரத்திற்கென்றே ஒரு கூட்டம் கிரில் கதவுகளுக்கு பின் ரெடியாக நின்று கொண்டிருப்பர்.சூடான அரவணை ( சர்க்கரைப் பொங்கல் போல இருக்கும்.இனிப்பு அளவாக இருக்கும்,நெய் ஊறிக்கொண்டிருக்கும்)தாயார் சன்னதியிலிருந்து வந்தவுடன் உருண்டை கணக்கில் இலையில் வைத்து தருகிறார்கள்.ஒரு உருண்டை 5.00 ரூ.பிரசாதமாக சாப்பிடலாம்.நிறைய சாப்பிட முடியாது.நெய் அதிகம் என்பதால் திகட்டும்.(சிறிது உவர்ப்பு சுவையுடன் இருக்கும் என்பது கூடுதல் தகவல்).
தகவல்: இரவு 9.30 க்கு தயார் சன்னதியிலிருந்தும்,10.00 மணிக்கு பெருமாள் சன்னதியிலிருந்தும் வரும் அரவணை பிரசாதம் பிரசாத ஸ்டாலில் கிடைக்கும்.
கொசுறு:பாலக்கரை பிர்மான‌ந்தா ச‌ர்ப‌த் 5.00 ரூ விலிருந்து 6.00ரூ ஆகிவிட்ட‌து
இன்று சாப்பிட்ட‌ பிர‌சாத‌ம்: த‌யிர்சாத‌ம் எலுமிச்சை ஊறுகாய்
அர‌வ‌ணை ப‌ற்றிய ஜெயஸ்ரீ யின் சமமைய‌ல் குறிப்புக்கு இங்கே http://mykitchenpitch.wordpress.com/2007/06/28/aravanai/

Friday 27 March, 2009

பெரிய திருவடி

ஸ்ரீரங்கத்தில் கருடாழ்வார் சன்னதியின் பின்புறச் சுவரை ஒட்டியில்லாமல் நடுவிலேயே கருடர் சிலை இருக்கிறது . அவரது பின்புறம் மற்றொரு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. கருடரின் பின்னால் ஒரு ரகசிய அறை இருப்பதாகவும், அதில் தங்கம், வெள்ளி என்று பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வதந்தி. அந்த வதந்திக்கு வலு சேர்ப்பதுபோல் ஜன்னல்களின் இடைவெளிகளும்கூட அடைக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின்போது, கோயில் நகைகளைக் காப்பாற்ற அங்கே பொக்கிஷங்கள் குவிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.ஆஜானுபாகுவான கருடரைக் காணும் போதெல்லாம் அவர் பின்னால் உள்ளதாக கூறப்படும் பொக்கிஷம் நினைவுக்கு வருகிறது.மருந்தை சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்ற கட்டளை போல.கருடாழ்வார் சன்னதிக்கு முன் உள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள நாயக்கர் சிலைகளின் பினிஷிங் அப்பா...தொட்டுப்பார்க்கத் தூண்டும்.

Thursday 5 March, 2009

திருப்பதி பெருமாள் தரிசனம்












இந்தமுறை திருப்பதி பெருமாள் தரிசனம் நன்கு அமந்தது.கல்யாண உற்ஸவத்திற்கு ஆன்லைனில் பணம் கட்டியிருந்தேன்.ரூ.1000/ சரியாக 11.30 க்கு வரிசையில் நின்றால் 1 மணி நேரத்திற்கு மேலாக நடக்கும் கலியாணத்தை பார்த்துவிட்டு, பிறகு மூலவர் சேவை.தம்பதிகளை மட்டுமே சபையில் அனுமதிக்கிறார்கள்.குழந்தைகள் வந்திருந்தால் சபையின் பக்கவாட்டில் அமரச் சொல்கிறார்கள்.பங்கேற்பாளர்களுக்கு ஒரு அங்கவஸ்த்திரம்,ஒரு ஜாக்கெட்பிட்,பெரிய லட்டு 2 , சிறிய லட்டு 5,பெரிய வடை 1, ஒரு பையில் போட்டு தருகிறார்கள்.எப்பொதும் போல பக்தி பயணத்தின் ஊடே நான் கிளிக்கிய சில வித்தியாசமான காட்சிகள் மேலே.

திருப்பதியில்



திருப்பதியில் இவரைப் பார்த்திருக்கிறீர்களா?






திருப்பதியில் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடியது.இவர் என்ன பணி செய்கிறார் என தெரியாது.யானை மீது பட்டர்கள் தீர்த்தம் எடுத்து வரும் போது யானையின் முன்னால் இவர் இரு ஊதுகுழல் வாத்தியத்தை ஒரு சேர வாயில் வைத்து வாசித்து வந்தார்.இந்த வயதிலும் ஒரு துள்ளல் குதியலுடன் இவர் சன்னதியை நோக்கி ஓடியது இன்னும் கண்முன் நிற்கிறது.கொஞ்ச நேரம் இவரின் பின்னால் தொடர்ந்து சென்றேன்.புகைப்படம் எடுக்க கேமராவை எடுத்ததும் தனது கை பையால் முகத்தை மூடிக்கொண்டார்.

காம்பினேஷன் மாறாக தேர்ந்தெடுப்பது தவறாகுமா?

ஒரு நாள் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்று சக்கரத்தாழ்வார் தாயார் தரிசனம் முடித்து எப்போதும் போல பிரசாத ஸ்டால் பக்கம் போனேன்.ஒரு பெண்மனி புளியோதரை வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு பெரியவர்தான் இலையில் வைத்து கொடுத்தார்.அந்த அம்மணி தொட்டுக்கொள்ள ஊறுகாய் கேட்டார். "தயிர் சாதம், தோசைக்குத்தான் ஊறுகாய் புளியோதரைக்கெல்லாம் தரமுடியாது" என்று முகத்தில் அடித்த மாதிரி சொன்னார். அந்த பெண்மணி முகத்தில் ஒரு அசட்டு வழிசல்.தலை குனிந்து கொண்டே திரும்பிப்போனார். பாவமாக இருந்தது.

இந்த உணவு வகைக்கு இதைத்தான் தொட்டுக் கொள்ளவேண்டும் என சட்டமா போடப்பட்டுள்ளது. கொஞ்சம் ஊறுகாய் கொடுப்பதனால் குற்றமா நிகழ்ந்து விடப்போகிறது.

இட்லிக்கு=சட்ட்னி,சாம்பார்
பூரி = கிழங்கு
புரோட்டா = குருமா
தயிர்சாதம் = ஊறுகாய்
ஆப்பம் = பாயா
இதெல்லாம் சரி தான்.
உயர்வான காம்பினேஷன் தான் அதில் மாற்றமில்லை.இதற்கு மாறாக தேர்ந்தெடுப்பது தவறாகுமா? எனது உணவை நானே தேர்வு செய்ய வேண்டும் என்பது நியாயமானது தானே.எனக்கு தெரிந்து எனது அத்தை பையன் ஒருவன் பழய சாதத்துக்கு தொட்டுக்கொள்ள மொளகாய்பொடி எண்ணை குழைத்து சாப்பிடுவான்.
எனது தகப்பனார் தயிர் சாதத்தில் குழி செய்து தெளிவான ரசத்தை அதில் விட்டு சாப்பிடுவார்.
இட்டிலிக்கு பழனி பஞ்சாமிதம்,
பாயசத்துக்கு வாழைப்பழம்& அப்பளம்,
அடை,அரிசிஉப்புமாவிற்கு வெல்லம் ,
சாம்பார் சாத‌த்திற்கு சாம்பார்,
அடைக்கு எலுமிச்சங்காய் ஊறுகாய்,
பிரண்டை துவையலுக்கு சுட்டஎண்ணெய்,
தயிர் சாதத்திற்கு தேங்காய் சட்னி,
என‌ விதியாச‌மான‌ க‌ம்பினேஷன்க‌ளும் உண்டு,இது அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம் ம‌ற்றும் உரிமை.பொது இட‌ங்க‌ளில் ஊறுகாய்க்கென த‌னியே காசு இல்லாத‌போது கொஞ்ச‌ம் கொடுத்துவிடுவ‌தில் என்ன‌ குறைந்து விடப்போகிற‌து.

Monday 2 March, 2009

சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 1

படம் 1 சந்திரபுஷ்கரணி குளம்
படம் 2 தாயாரின் வசந்தமண்டபம்


படம் 3 வசந்தமண்டபம் மூடிய கேட்டிற்கு வெளியிலிருந்து

28.02.2009 இன்று நம்பெருமாள் முn மண்டபத்திலேயே சேவை.கோதை சொன்னது போல பெருமாள் "தேமேன்னு" இருந்தார்.இப்போது மனோரஞ்சிதம் சீசன் போல. ஸ்ரீரங்கத்தில் பல கடைகளில் மனோரஞ்சித பூவை பார்க்க முடிந்தது.தாயார் தரிசனம் நன்கு கிடைத்தது.தாயார் சன்னதியில் வேளுகுடி கிருஷ்ணன் அவர்களை பார்த்தேன். சக தர்மினியோடு வந்திருந்தார்.என்ன ஒரு தேஜஸ்.நீக்ரோவிற்கு இருப்பது மாதிரி சுருள் முடி. பாதி தலை மழுங்கடிக்கப்பட்டிருந்தது.கிஞ்சித்காரம் ஆடியோ சிடியில் இவரது உபன்யாசம் கேட்டிருக்கிறேன்."பாகவத முத்துக்கள்" இவரது சிறப்பான பேச்சு.எப்போது நேரில் கேட்க்கப் போகிறேன் தெரியாது.பெருமாள் அனுக்கிரஹம் வேணும்.

பி.கு
ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் இன்னும் பாவாடை சட்டை, பாவாடை தாவணியில் லட்சணமான குழந்தைகளை பார்க்க முடிகிறது.

இன்றய பிரசாதம் தோசை எலுமிச்சங்காய் ஊறுகாய்.

தகவல்: அப்பம் மாலையில் தான் கிடைக்கும்.

தட்பவெப்பம்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ....என்ன வெய்யில்...காவிரி படுத்தவன் மார்பில் பூணல் மாதிரி ஒரு ஓரமாக‌ நெளிந்து செல்கிறது.

Monday 9 February, 2009

கோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை


இது வெள்ளை கோபுரம்.இக் கொபுரத்தின் உள்புறம் சுவற்றில் செதுக்கியுள்ள சிற்பங்கள் மற்றும் கல்வெட்டு தொடர்பான திரு.ஆ. சிவசுப்பிரமணியன் அவ‌ர்க‌ளின் க‌ட்டுரையிலிருந்து ஒரு ப‌குதி.இது கால‌ச்சுவ‌டு இத‌ழில் திரு.சுஜாதா அவ‌ர்க‌ளுக்கு ப‌தில‌ளிக்கும் வித‌மாக‌ க‌ட்டுரை ஆசிரிய‌ர் எழுதிய‌து.அப் பெரும் க‌ட்டுரையிலிருந்து ந‌ம‌க்கு வேண்டிய‌ ப‌குதி ம‌ட்டும் இங்கே.
கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வைத்தியநாத காýங்கராயன் என்ற கோனேரி ராயன் வட தமிழகத்தின் மன்னனாக ஆட்சி புரிந்துவந்தான். சைவனான இவனால் திரு அரங்கநாதர் கோவிலுக்கு ஏற்பட்ட இடையூறுகளைக் கோயிலொழுகு விரிவாகக் குறிப்பிடுகிறது (மேலது: 586-587). அதைத் தற்கால நடையில் வைஷ்ணவ ஸ்ரீ கூறுவது வருமாறு:

கோனேரி ராஜா திருவானைக்காவýல் உள்ள சிலருடன் நட்புக் கொண்டு அவர்களைத் தங்களுடைய விருப்பப்படி வரி வசூýத்துக்கொள்ளவும், திருவானைக்காவினுடைய எல்லையாகத் திருமதில்கள் கட்டிக்கொள்ளவும் உதவிசெய்தார்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைக் கோனேரி ராஜா தனக்கு வேண்டியவர்களான கோட்டை சாமந்தனார் மற்றும் சென்றப்ப நாயக்கர் ஆகியோருக்குக் குத்தகைக்குவிட்டார். ‘புர வரி’ ‘காணிக்கை வரி’ ‘பட்டு வரி’ ‘பரிவட்ட வரி’ போன்ற வரிகளை விதித்து ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீபண்டாரத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த திருவாபரணங்களையும் பொற்காசுகளையும் கவர்ந்து சென்றான்.

இதை எதிர்க்கும் வகையில் அழகிய மணவாளதாசர் என்ற பெரியாழ்வாரும் இரண்டு ஜீயர்களும் திருவரங்கத்தின் வெள்ளைக் கோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர். அப்பாவு அய்யங்கார் என்பவரும் தெற்கு இராஜகோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இவர்களுள் முதல் மூவருடைய உருவச் சிலைகளை வெள்ளைக் கோபுரத்தின் நடைபாதையிலும் தெற்கு கோபுர வாயிýன் கீழ்ப்புற நிலையில் அப்பாவு அய்யங்காரின் உருவச் சிலையையும், கந்தாடை இராமானுச முனிவர் என்பவர் செதுக்கிவைத்தார். இந் நிகழ்வு குறித்து இரு கல்வெட்டுகளும் உள்ளன
கோனேரி ராயன் செயலை எதிர்த்துக் கோபுரத்திýருந்து குதித்து உயிர் துறந்த அப்பாவு அய்யங்காரின் சிலைக்குச் சில மரியாதைகளையும் நைவேத்தியங்களையும் கந்தாடை இராமானுச முனிவர் ஏற்படுத்தினார். இதை அப்பாவு அய்யங்காரின் சிலைக்குமேல் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கூரநாராயண ஜீயர் என்பவர் வைணவ விரோதிகளான திருவானைக்கா சைவர்களை ஒழித்தது குறித்துக் ‘கோயிலொழுகு’ (பக்: 433-434) குறிப்பிடும் செய்தி வருமாறு:

‘அந்த ஜீயரும் சைவர்களோடு கூடியிருந்து அவர்களுக்கு நன்மை பண்ணுகிறோம் என்று சொல்ý ஒரு மஹேஸ்வர பூஜைக்கு ஏற்பாடு செய்தார். கிழக்கே காட்டழகிய சிங்கர் கோயிலுக்கு பின்வழியில் பெரிதாகக் கொட்டகை அமைத்து அதிலே ஒரு பாகசாலையை (சமையல் செய்யுமிடம்) நிர்மாணித்தார். அந்த இடத்தில் ஒரு பெரிய கொப்பரையில் (விளிம்பு கொண்ட அகலமான வாயை உடைய ஒரு பாத்திரம்) நன்றாக நெய்யைக் காய்ச்சி வைத்தார். சைவர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்து அவர்கள் பந்தியிலே உட்கார்ந் திருக்கும்போது தம்முடைய மார்பிலே நரஸிம்ஹ யந்திரத்தை கட்டிக்கொண்டு காய்கிற நெய்க் கொப்பரையிலே அவர் குதிக்க அந்தக் கொட்டகையில் இருந்த சைவர்கள் அனைவரும் தீய்ந்து சாம்பலாகிப்போனார்கள்.

Thursday 5 February, 2009

ஸ்ரீரங்கம் சில‌ வித்யாசமான பார்வை






ஸ்ரீரங்கம் கோவிலில் பார்க்கக் கூடிய பல இடங்கள் இருந்தாலும்
என் பார்வையில் ப‌ட்ட‌ சில‌ வித்யாச‌மான‌வைக‌ள் இங்கே புகைப்ப‌ட‌ங்க‌ளாக‌

Sunday 1 February, 2009

அழியும் நிலையில் நாயக்கர்காலத்து ஓவியங்கள்









திருவரங்கத்தில் தாயார் சன்னதிவெளிப் பிரகாரத்து மேல் சுவற்றில் வரையப்பட்டுள்ள அற்புதமான நாயக்கர்காலத்து ஓவியங்கள் சிதிலமடைந்து வருகிறது.தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ள படத்துக்கான விளக்கங்களும் அழியும் நிலையில் உள்ளன.சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து இந்த அற்புத படைப்புகளைக் காக்கஆவன செய்ய வேண்டும்.

Sunday 25 January, 2009

அன்ன தாதா சுகி பவா

திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் ஆண்டர்வீதி என்றொரு தெரு.உள்ளே நுழைந்து இரண்டாவது கட்டிடம் மதுராகபே.காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரையில் சாப்பாடு கிடைக்கும்.கலியாண பந்தியைப்போல எட்டு வரிசைக்கு மேல் டேபிள் சேர் போடப்பட்டிருக்கும்.நான் இந்த ஹோட்டலின் உணவுக்கு பரம ரசிகன்.சாதாரண வீட்டுச் சாப்பாடு போல் தான் இருக்கும்.சாம்பார்,ரசம், மோர்குழம்பு அல்லது வற்றல் குழம்பு,ஒரு கறி ஒரு கூட்டு மோர் வேண்டுமானால் தயிர்.ஒரு முறை இங்கு சாப்பிட்டால் ருசி நாக்கை விட்டு போகாது.விரத நாட்களில் வெங்காயம், பூண்டு இல்லாத சமயல் தான்.அரைத்துவிட்ட சாம்பாரும், பெருங்காயம் மனக்கும் ரசமும் நினைவில் இருந்து கொண்டிருக்கும்.சாப்பிட்டு முடித்ததும் ஸ்ரமத்தோடு " அன்ன தாதா சுகி பவா"" என மனசு தானாக சொல்லும்.

Thursday 8 January, 2009

வெளியில் தெரியாத ரசிகர் மன்றங்கள்.

திருச்சியில் வெளியில் தெரியாத பல ரசிகர்மன்றங்கள் உண்டு.இப்போது சாரதாஸ் ஜவுளிக்கடைக்கு என்று பிரத்யேகமான ரசிகர் கூட்டங்கள் உண்டு. என்ன தான் மழை பொழிந்தாலும், வெயில் அடித்தாலும் அந்தக்கடையில் தான் துணிமணிகள் எடுக்கவேண்டும் என பிடிவாதமாக இருக்கும் மனிதர்கள் உண்டு.பக்கத்து கிராமங்களில் இருந்து சாப்பாடு கட்டிக் கொண்டு வந்து துணிமணிகளை எடுத்துவிட்டு அந்த ஹாலிலேயே ஒரு ஓரமாக கொன்டுவந்த உணவை உண்ணும் குடும்பத்தினரை பார்த்திருக்கிறேன்.இது சென்டிமென்ட் காரணமாக கூட இருக்கலாம்.சிறு வயதில் தீபாவளிக்கு அப்பாவுடன் சாரதாஸ் வந்து துணிகள் எடுத்த மகன் அதே நினவலைகளுடன் இன்று தன் குடும்பத்துடன் இங்கு வ்ந்து விடுகிறார்போலும்.இவர்களுக்கு சாரதாஸ் மஞ்சள் பை வந்தால் தான் தீபாவளி வந்த மாதிரி இது மதம் தாண்டி இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் காலத்திலும், கிருத்துவர்கள் கிருஸ்துமஸ் காலத்திலும் இங்கு குழுமுவது வாடிக்கை.( ஆனால் நான் சாரதாஸில் துணி எடுப்பதில்லை என்பது வேறு விஷயம் கூட்டமே எனக்கு அலர்ஜி)இதே போல திருச்சி யில் பிர்மானந்தா சர்பத்,மார்கெட் ஜிகிர்தண்டா,கிருஷ்னா ஆயில் மில்,இப்படி அறிவிக்கப்படாத ரசிகர் மன்ற்ங்கள் ஏராளம். இது ஏன் இங்கே என்கிறீர்களா? நானும் ஒரு ரசிகர் மன்றத்துக்காரன் தான். அடுத்தப் பதிவில் அதை பற்றி எழுதுகிறேன்.

bullet

Sunday 4 January, 2009

திருவரங்கத்து சிறப்பு தோசை



திருவரங்கத்தில் மார்கழிமாதத்தில் பல விசேஷங்கள் உண்டு.பகல்பத்து,இராப்பத்து, அரயர்சேவை,முத்தங்கி சேவை, என சிறப்புகள் நீண்டு கொண்டே போகும்.அதை பற்றியெல்லாம் இங்கு நான் எழுதப்போவதில்லை.இந்த நாட்களில்மட்டுமே பிரசாதமாகக் கிடைக்கும் சம்பாரதோசை பற்றிய பதிவு இது.தோசை என்றால் எந்த அளவு இருக்கும், எவ்வளவு மொத்தம் இருக்கும், என்று உங்களுக்குள் ஒரு கற்பணை இருக்கும். அதையெல்லாம் தவிடு பொடி யாக்கிவிடும் நேரில் பார்த்தால். நெய் தோய்ந்து இருக்கும்.வாயில் போட்டால் அவ்வளவு சுவை.தொட்டுக்கொள்ள வேறு ஒன்றும் தேவை யில்லை.(கேட்டால் நம்மை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள்.)ஒரு தாம்பாளம் சைசில் இருக்கும். அதனை பாதியாக்கி அதயும் பாதியக்கி அதயும் பதியாக்கி ஒருவர் சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடும். இன்றய விலை ரூ.100/ எட்டு பேர் சாப்பிடலாம்.ஒருமுறை இந்த 20 நாட்களில் வந்து இதனை சுவைத்துப் பாருங்கள் அப்புறம் வருடா வருடம் வந்துவிடுவீர்