Saturday 24 September, 2011

புத்தகச்சந்தை


அறிந்ததினின்



இன்று திருச்சி வாசவி மஹாலில் புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகங்கள்.


       
1
அறிந்ததினின்றும் விடுதலை
நர்மதா
2
விடுதலை துவக்கமும் முடிவும்
நர்மதா
3
வாழ்க்கை அடிப்படை கேள்விகள்
நர்மதா
4
ஆழ்வார்கள் ஒர் எளிய அறிமுகம்
கிழக்கு பதிப்பகம்
5
தாயம்
மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
6
தேவர்
கிழக்கு பதிப்பகம்
7
ஹம்ஸகீதை
செண்டரல் சின்மயா மிஷின்
8
ஸாதனமும் ஸாத்தியமும்
வானதி பதிப்பகம்
9
பகவத் கீதையின் ஸாராம்சம்
வானதி பதிப்பகம்
10
தர்மத்தின் மதிப்புதான் என்ன?
வானதி பதிப்பகம்
11
கு.அழகிரிசாமி
சாகித்ய அகாதெமி
12
தஞ்சை ஜில்லாவில் நடந்தது என்ன?
பாரதி புத்தகாலயம்
13
தெய்வத்தின் குரல் 5ம் பகுதி
வானதி பதிப்பகம்
14
தெய்வத்தின் குரல் 6ம் பகுதி
வானதி பதிப்பகம்
15
பாபநாசம் சிவன்
விகடன் பிரசுரம்
16
சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்
விகடன் பிரசுரம்
17
மதப்புரட்சி செய்தமகான் ஸ்ரீராமானுஜர்
வானதி பதிப்பகம்
18
காஹிதமலர்கள்
உயிர்மை பதிப்பகம்
19
எக்ஸிச்டென்ஷியலிசமும் ஃப்பான்ஸி பனியனும்
உயிர்மை பதிப்பகம்
20
என் பெயர் ராமஷேஷன்
உயிர்மை பதிப்பகம்



21
போட்டோ ஷாப்
விரிச்சுவல் டீச்சர்
21
சே வாழ்வும் புரட்சியும்
மார்டன் சினிமா
22
Benicio Del Toro CHE Guerriglia
2 பார்ட்

Sunday 11 September, 2011

திருமலை பயணம் 4

காலை சீக்கிரமே எழுந்து வராகஸ்வாமி தரிசனம் முடித்து 11.00 மணிக்கு 50.00 ரூ  கியூ வில் நின்றோம்.12.30 க்கு தரிசனம் கிடைத்தது.எப்போது போனாலும் பெருமாள் திருப்தியாக தரிசனம் தருவார்.”ஜெருகண்டி” தொந்தரவு எனக்கிருந்ததில்லை. அங்கிருந்தவர் என்னை பிடித்து நிறுத்தி நன்றாக சேவிக்க அனுமதித்தார்.எவ்வளவு சேவித்தால் என்ன மனசில் அடங்குபவனா அவன்.கனவு கண்ட மாதிரி கன்ணுக்குள்ளும்,மனசுக்குள்ளும்,பிடிபட மாட்டான்.வெளியில் வந்து லட்டு பிரசாதம் வாங்கச் சென்றபோது தினாவை தவறவிட்டு விட்டோம்.1.30 மணிநேரம் அவனைக் கண்டு பிடிக்க அலைந்தோம்.ஒரு வழியாக ஒரு பண்ருட்டி நண்பர் ஒருவர் தினாவை செய்தி ஒலிபரப்பும் இடத்திற்கு அழைத்து வந்திருந்தார்.செல்போன் அனுமதி யில்லாததால் அதனை ரூமிலேயே விட்டு விட்டு வந்திருந்தோம்.கென்னடியும்,அவன் மனைவி மஞ்சுவும் பட்ட அவஸ்தைகள் பார்க்க முடியவில்லை,பெருமாளை வேண்டிக்கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.ஏகப்பட்ட வேண்டுதல்களை பெருமாள் பெற்றுக் கொண்டிருப்பார்.4.00 மணிக்கு மதிய உணவு அன்ன தான சத்திரத்தில் சாப்பிட்டு விட்டு அறைக்கு திரும்பினோம்.ஒரு ஜீப் பிடித்து (ரூ650) சிலாத்தோரணம்,சக்கர தீர்த்தம்,ஆகாச கங்கை,பாபவிநாசம்,பாபாஜி ஜீவசமாதி,போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு அறைக்குத் திரும்பினோம்.இரவு டிபன் முடித்து விட்டு பாலு வுடன் இந்துவும்,மரகதமும் பர்ச்சேஸ் கிளம்பினார்கள்.எப்படித்தான் முடிகிறதோ.பாலு பாவம் முகம் சுளிக்காமல் உடன் சென்று வந்தான் மற்றவர்கள் அனைவரும் அறைக்குச் சென்று நல்ல தூக்கம் போட்டோம்.காலை 6.00 க்கு திருமலையிலிருந்து காலி செய்து ஒரு ஜீப் ( ரூ850 திருமலையிலிருந்து அலமேலுமங்காபுரம்,ஹோட்டல் டிபன் வெயிட்டிங்,ரயில்வே ஸ்டேஷன்) பிடித்து அலமேலு மங்காபுரம் சென்று தரிசனம் முடித்து அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் வந்தோம் 09.55 க்கு சென்னைக்கு டிரைன்.ஏ.சி இல்லாத குறை நன்கு தெரிந்தது. 

02.09.2011 திருமலை பயணம் 3



மதியம் 12.30 க்கு எக்மோர் சென்றோம்.நண்பர்கள் கணேசனும் பாபாவும் எங்களை காண வந்திருந்தனர்.லக்கேஜ் இருந்ததால் சரவணபவன் செல்லாமல் எதிரே இருந்த சங்கீதா ஹோட்டலுக்கு மதிய உணவுக்குச் சென்றோம்.95.00 ரூ சாப்பாடு.விலைகும் சுவைக்கும் சம்பந்தமே இல்லை.சாப்பிட்ட பின் ”அன்னதாதா சுகிபவா” என மனம் வாழ்த்த வேண்டும்.அதுதான் சாப்பாடு. அங்கிருந்து 3 ஆட்டோக்களில் செண்ட்ரல் சென்று சப்தகிரி எக்ஸ்பிரஸ் ப்டித்தோம்.ஏ.சி யின் சுகத்தில் கண்னயர்ந்தோம்.கண்விழித்த போது 4.00 மணி வாய் ஏதாவது கேட்டது.கென்னடி வேகவைத்த மல்லாட்டை(நிலக்கடலை) கொண்டு வந்திருந்தான்.அதை அனைவரும் சேர்ந்து காலி செய்தோம்.திருப்பதி 5.00 மணி.ஒரு ஜீப் பிடித்து திருமலை சென்றோம்.எங்கள் குழுவில் 9 பேர்.ஜீப்பிற்கு ரூ500 பேசினோம்.நண்பர் மூலமாக கர்நாடகா கெஸ்ட் ஹவுஸ்ல் இரண்டு ரூம் போடப்பட்டிருந்தது.இரண்டு கட்டில் கொண்ட அறை.போதுமான அளவு இருந்தது.மறுநாள் காலை 11.00 மணிக்கு தான் தரிசனம்.வெண்னீர் குளியல் போட்டு விட்டு கடைவீதிக்குச் என்றோம். பெண்கள் வேண்டியதை வாங்கிக் கொண்டார்கள்.நான்,பாலு,கென்னடி,விபின்,தினா அய்வரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டோம்.திருமலை எப்போதும் ஜே ஜே எனதான் உள்ளது.ஒரு வட இந்திய பெண்மணி தன் கணவனுக்கு கால் அமுக்கிக் கொண்டிருந்தாள். நட்ந்து வந்திருக்க வேண்டும்.பல்வேறு விதமான மனிதர்கள்,பல தேசம்,பல மொழிகள்,எல்லாம் பாலாஜியை தரிசிக்கவே அதில் நானும் ஒருவன் எனும் போது மனம் நெகிழ்ந்தது.இரவு டிபன் முடித்து ரூம்க்கு வந்தோம்.நல்ல தூக்கம்.

02.09.2011 திருமலை பயணம் 2

பாலு  ஜெயங்கொண்டத்தில் இருக்கிறான்.மனைவியுடன் விருத்தாசலத்திலிருந்து பல்லவனில் ஏறிக்கொள்வதாக கூறினான்.கென்னடி வீட்டில் இரு மக்களுடன் நான்குபேர் விழுப்புரத்தில் ஏறிக்கொள்வதாகக் கூறினான்,எல்லாம் ஏற்பாடு ஆயிற்று.ரூம் தவிர.இவ்வளவு செய்த பெருமாள் அதையும் கொடுப்பார்.பூமிநாதன் விருத்தாசலந்திலிருந்து ஏறிக் கொள்வதாக கூறினார்.திருச்சி முதல் சென்னைவரை பல்லவன் ஏ.சி கிடைக்க வில்லை.சென்னை முதல் திருப்பதி வரை ஏ.சி இருந்தது.அதுபோலவே 5.9.11 திருப்பதி முதல் சென்னை வரை ஏ.சி இல்லை சப்தகிரி எக்ஸ்ப்ரஸ்.சென்னை முதல் விழுப்புரம் விருத்தாசலம் ,திருச்சி வரை ஏ.சி இருந்தது.புக் செய்த பிறகு மறுநாள் பூமிநாதன் சில காரங்களால் வரமுடிய வில்லை எனகூரியதால்.அவரது டிக்கட் மட்டும் கேன்சல் செய்தோம்.
கென்னடி கேட்டுக் கொண்டதால் கடைசிநேரத்தில் திரும்பும் நாள் 05.09.11 க்கு பதிலாக 04.09.2011 என மாறியது.அதனால் டிக்கட் ஏ.சி கிடைக்கவில்லை.
02.09.11 காலை நான்,ஜயந்தி,ம்கன் விபினுடன் பல்லவனில் ஏறிக்கொண்டோம்.எப்போதும் பயணம் எனக்குச் சலிப்பதில்லை.அதுவும் திட்டமிட்ட பயணம் சுகம்.திட்டமிடாத பயணம் குடும்பத்துடன் செல்வது சோர்வை ஏற்படுத்தும்.எந்த வேலையை எடுத்தாலும் ”ஏண்டா எடுத்தோம்” என நினைக்கும் நிலை வரக்கூடாது.விருத்தாசலத்தில் பாலு மனிவியுடன் ஏறிக்கொண்டான்.பாலு உடன் பயணித்தல் உற்சாகமாக இருந்தது.பாலு நிறைய பேசுவான்.எதை பற்றி வேண்டுமானாலும் பேசுவான்.பேசுவதன் மூலமாக உறவாடுவதும் உறவை பலப்படுத்துவதும் அவன் பாணி.அவன் மனைவி நேர் எதிர்.அளந்து பேசுவார்.ஆர்பாட்டமில்லாத பேச்சாக அது இருக்கும்.  அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் ஒருவர் இப்படி இருப்பது ஆச்சரியம்.பாலுவுக்கு சரியான டீச்சர்.விழுப்புரம் வந்த வருவதற்கு முன்னே நானும் பாலுவும் வாயிற்படிக்கு வந்து நின்றோம்.கென்னடியையும் அவன் குடும்பத்தினரையும் வரவேற்க.கென்னடியை பார்த்ததுமே நம்  மனம் இளமையாகிவிடும்.அப்படி ஒரு வரம் அவனுக்கு.எப்போதும் சிரித்தபடி இருப்பான்.விழுப்புரத்தில் அவர்களோடு சேர்ந்து பயணம் தொடந்தது.பேச்சு,பேச்சு,பேச்சு,

02.09.2011 திருமலை பயணம்

திருக்கோவிலூர் நண்பன் கென்னடி வீட்டிற்குச்சென்றபோது திருப்பதி போகவேண்டும் என வேண்டுதல் இருப்பதாக கூறினான்.”ஏற்பாடு செய்டா” என கேட்டுக் கொண்டான். கென்னடி என் கல்லூரி நண்பன்.நெடியவன்.மனதாலும்.அரகண்ட நல்லூரில் தானியக் கமிஷன் மண்டியில் ஏஜண்டாக இருக்கிறான்.கடலை,எள்ளு,வங்கி,லாரி,லோடு என சதா சர்வ காலமும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு அலைபவன்.தந்தையின் தொழிலை கற்றுக் கொண்டு வளமாயிருக்கிறான்.பொதுவாக கூட்டுப் பயணம் எனக்கு அலர்ஜி.ஒத்த கருத்துடையவர்களாக இருக்க மாட்டார்கள்.புல்லை புல்லாகவும் கல்லை கல்லாகவும் மட்டுமே பார்ப்பவர்களுடன் பயணிக்க முடியாது.ரசணை முக்கியம்.பயணம் என்பதும் பக்தி என்பதும் வார்த்தைகளைத்தாண்டி பல தளங்களைக் கொண்டது என்பது என் எண்ணம்.ஆன்மீகப் பய்ணத்தில் பெண்கள் சிலரை ஒருங்கிணைப்பதென்பது சிரமம்.உடல் உபாதைகள் இடையூராக இருக்கும்.இருந்தும் பெருமாள் அழைக்கிறார் காலடுப்போம் என முயற்சித்தேன்,ஆன் லைன் இ சுதர்சன் 03.09.2011(சனிக்கிழமை) இருந்தது.ரூம் எதும் இல்லை.திருச்சியிலிருந்து சென்னை,சென்னையிலிருந்து திருப்பதி டிரைன் டிக்கெட்டும் இருந்தது.கென்னடியிடம் பேசினேன்,வீட்டில் கலந்து சொல்வதாகச் சொன்னான்.அடுத்த அரை மணிநேரத்தில் சரி என்றான்.நாங்கள் 1982-85 விருத்தாசலம் கொள்ஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் படித்த நண்பர்கள் கடந்த 3 வருடங்களாக தொடர்பில் இருக்கிறோம்.குடும்ப சந்திப்பு , வீட்டு விசெஷங்கள்,என வருடத்திற்கு ஒரு முறையாவது கூடிவிடுகிறோம்.அவர்களிடமும் சொல்லி வருபவர்கள் வரலாம் என முடிவு செய்தோம்.ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன்.பூமிநாதன்,பாலு ஆகியோர் ஓகெ சென்னார்கள்.