Monday 19 July, 2010

கம்பத்தடி ஆஞ்சனேயர்

11.07.2010 அமாவசையன்று கம்பத்தடி ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனத்திற்கு கட்டணம் கட்டியிருந்தேன்.சரியாக 12.30க்குள் சன்னதிக்கு வந்துவிடவேண்டும்.1.00 மணிக்கு ஆரியபடாள் வாசல் மூடிவிடுவார்கள்.அதற்குள் வந்துவிடவேண்டும். கம்பத்தடி ஆஞ்சனேயர் ஆரியபடாள் வாசல் தாண்டி துவஜஸ்தம்பத்திற்கு முன்னால் இருக்கிறார். எப்போதும் அரங்கனையே பார்த்துக்கொண்டு கைகூப்பியவாறு இருக்கும் ததேஜஸினால் நல்ல வரப்பிரஸாதி.வேண்டிக்கொண்டால் நிச்சயம் நடக்கும்.எனக்கு பத்துஅண்ணா தான் முதலில் சொன்னார்.நீண்டநாள் வேண்டுதல் ஏதேதோ காரணங்களால் தள்ளிபோய்க்கொண்டே இருந்தது.ஏகப்பட்ட டியூ.இன்னும் கூட ஒரு திருமஞ்சனம் சக்கரத்தாழ்வாருக்கும், கம்பத்தடி ஆஞ்சனேயருக்கும் ம் பாக்கி யிருக்கிறது.ஆனால் அவர்கள் ஏதும் எனக்கு பாக்கி வைக்கவில்லை. குறையொன்றுமில்லை.கோதைக்கும் தகவல் சொன்னேன்.நேரத்தில் வந்தாள்.நல்லசேவை.திருமஞ்சனம் முடிந்ததும் பட்டர் ”கம்பத்தடி ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம் செய்தோம் என சொல்லிவிட்டு பெரிய பெருமாளை தரிசிக்கப் போங்கள்” என கோதையிடம் சொல்ல ஒரே ஓட்டமாக அரங்கனை பார்க்கச் சென்றோம்.இன்று பாத சேவை கிடையாது.உள்ளே நுழந்ததும் கள்வன் நம்பெருமாள் என்னைப்பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்.”நன்னா காய விட்டேனா” எனபது மாதிரி பார்த்தார்.நாலஞ்சு மாசமா கண்ணுலயே படலை.பங்குணி உத்தரம் சேத்தியில் பார்த்தது.என்ன பாக்கியமோ இன்னிக்காவது காட்சி தந்தாயே என உள்ளம் மருகியது.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த எனக்கு உன் கீழே வாழ வாழ்வு தந்தாய்.ஆண்டாளுக்கே ஆட்டம் காட்டியவன்.நானெல்லாம் எம்மாத்திரம்?


ஒன்றும் மறந்தறியேன், ஓத நீர் வண்ணனை நான்;
இன்று மறப்பனோ, ஏழைகாள்? அன்று,
கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன், கண்டேந்
திருவரங்கம் மேயான் திசை

பி-கு

திருமஞ்சனம் முடிந்ததும் ஒரு வட்ட வடிவில் (வடை சைசில்) சந்தனம் தருகிறார்கள். திருவடியில் வைத்தது உடையாமல் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என பட்டர் கூறினார்.வீட்டிற்கு வரும் வரையில் ஜெயந்தி அதனை பத்திரமாக பாதுகாத்து கொண்டு வ்ந்தாள்.நான்கு வழிச்சாலை பூரணமான பின்பு இன்றுதான் அவ்வழியில் சென்றேன்.நல்ல சாலை.20 நிமிடத்தில் ஸ்ரீரங்கதிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டோம்.




No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே