Sunday 25 January, 2009

அன்ன தாதா சுகி பவா

திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் ஆண்டர்வீதி என்றொரு தெரு.உள்ளே நுழைந்து இரண்டாவது கட்டிடம் மதுராகபே.காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரையில் சாப்பாடு கிடைக்கும்.கலியாண பந்தியைப்போல எட்டு வரிசைக்கு மேல் டேபிள் சேர் போடப்பட்டிருக்கும்.நான் இந்த ஹோட்டலின் உணவுக்கு பரம ரசிகன்.சாதாரண வீட்டுச் சாப்பாடு போல் தான் இருக்கும்.சாம்பார்,ரசம், மோர்குழம்பு அல்லது வற்றல் குழம்பு,ஒரு கறி ஒரு கூட்டு மோர் வேண்டுமானால் தயிர்.ஒரு முறை இங்கு சாப்பிட்டால் ருசி நாக்கை விட்டு போகாது.விரத நாட்களில் வெங்காயம், பூண்டு இல்லாத சமயல் தான்.அரைத்துவிட்ட சாம்பாரும், பெருங்காயம் மனக்கும் ரசமும் நினைவில் இருந்து கொண்டிருக்கும்.சாப்பிட்டு முடித்ததும் ஸ்ரமத்தோடு " அன்ன தாதா சுகி பவா"" என மனசு தானாக சொல்லும்.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே