Sunday 15 September, 2013

திருநீர்மலை

நீண்ட நாட்களாக தரிசிக்க வேண்டும் என நினைத்திருந்த திருநீர்மலை ஷேத்திரத்தை தரிசிக்க ஒரு வாய்ப்பு இப்போது கிடைத்தது.பல்லாவரத்திலிருந்து இடது பக்கம் பிரியும் சாலையில் ஒரு 3 கி.மீ தாண்டிய உடனேயே சென்னை பரபரப்பு அடங்கி சாலை ஏதோ குக்கிராமத்திற்கு வந்து விட்ட உணர்வு வ்ந்துவிடுகிறது.செல்லும் வழியில் உயர்ந்த ஏரிக்கரை.வண்டியை நிறுத்திவிட்டு ஏரிக்கரையில் ஏறி பார்த்தால் பிரம்மாண்டமான ஏரி.நீர் நிறைந்து காணப்பட்டது.பல்வேறு விதமான பறவைகள் வெள்ளையும் கருப்புமாக பெரிய பெரிய சைசில் நீரில் நீந்திக்கொண்டிருந்தன.வேடந்தாங்கல் வந்துவிட்டோமா? என்கிற உணர்வு வந்து விடுகிறது.
கோவில் காலை எட்டு மணிக்கு மேல்தான் திறக்கிறார்கள்.கீழே ஒரு கோவில்.மலைமீது ஒரு கோவில்.

இது கீழே உள்ள கோவில்.



மலைமேல் நின்றகோலம் ,கிடந்தகோலம்,இருந்தகோலம் என மூன்று பெருமாள் அருள்பாலிக்கிறார்.














No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே