Friday 9 February, 2018

முள்ளிக்கரும்பூர்

திருச்சி வயலூர் அருகே உள்ள முள்ளிக்கரும்பூரில் ஒரு சிவன் கோவில் இருந்தது என வரலாறு .காம் ல் படித்திருக்கிறேன் . இன்று குமார வயலூர் போன போது அங்கு போனேன் . கோவில் இருந்த இடம் தெரியவில்லை . விக்ரகங்களை பாலாலயம் செய்து ஒரு கொட்டகையில் வைத்திருந்தார்கள் . புதிய கோவிலுக்கு அடித்தளம் மட்டும் போடப்பட்டுள்ளது . பிரிக்கப்பட்ட கோவில் கட்டிட கற்களும் , தூண்களும் , ஆங்காங்கே குவிக்கப் பட்டு இருக்கிறது . திருப்பணி முடிந்து விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டிக்கொண்டேன் . அருகே உள்ள கிராம தேவதைகள் கோவிலில் ( வெள்ளம் காத்த அம்மன் ) வரிசையாக ஓரடி உயர சிலைகள் வைக்கப்பட்டு இருக்கிறது . அதில் சில நடுகல் போல இருக்கிறது .

Image may contain: tree and outdoor

Image may contain: plant, tree, sky, outdoor and nature

Image may contain: sky, tree, plant, outdoor and nature

Image may contain: outdoor

Image may contain: plant, tree, sky, grass, outdoor and nature

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே