Friday 25 November, 2016

நேற்று அலுவலகம் கிளம்பும்போது "இன்னிக்கு மதியத்திலிருந்து உங்களுக்கு சந்திராஷ்டமம்.வாயை பொத்திண்டிருக்கனும்."என்னும் எச்சரிக்கை யுடன் வழியனுப்பிவைத்தாள் மனைவி. சிக்னலில் ஓவர்டேக் செய்யாமல் காத்திருத்தல், சாலையில் குறுக்கே வருபவரிடம் புன்னகையுடன் வழிவிடுதல், ஏடிஎம் வரிசையில் நகத்தை கடிக்காமல் முன்னால் நிற்ப்பவரின் சட்டையில் உள்ள கோடுகளை எண்ணிக்கொண்டிருத்தல், அலுவலகத்தில் யாரிடம் பேசினாலும் அளந்து பேசுதல், போனில் வந்த உடனடி பிரசவிக்க வேண்டும் எனும் உயர் அலுவலர் உத்தரவிற்கு புன்னகையுடன் "லேபர் டேபிளில்தான் படுத்திருக்கேன் சார்" அஞ்சு நிமிஷத்தில் பிரசவித்துவிடுவேன்சார்.. என்னும் சாந்தமான பதில், என நேற்று பால்சாதங்கள் மாதிரியான சந்திராஷ்ட்டம எஃபக்ட்ஸ் எல்லா இடத்திலும் , நேரத்திலும், நீக்கமற நிறைந்திருந்தது. ஒவ்வொருநாளும் சந்திராஷ்ட்டமமாக இருந்தால் சன்னியாசி யாகவே ஆகிடலாம் போல.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே