Friday 25 November, 2016

ஊர் மணம்.

இன்று அலுவலகத்திற்கு ஒரு திரைப்பட இயக்குனர் குழுவுடன் படப்பிடிப்பு தொடர்பான வேலையாக வந்தார்.வந்த வேலை பற்றி பேசி முடித்தவுடன் எந்த ஊர் என்றேன். கடலூர் என்றார். கடலூரேவா இல்ல பக்கத்திலா என்றேன்.நெய்வேலிகிட்ட என்றார். நான் விருத்தாச்சலம் தான் என்றேன்.நானும் விருத்தாச்சலம் தான். கடலூர்ன்னா சட்டுநு புரியும் என்று சொன்னேன் என்றார். அப்புறம் என்ன? பூதாமூர்,கிருஷ்ணன் தோட்டம்,வீரபாண்டியன் தெரு,ஆயியார்மடம்,கரிநாள், அறிவுமதியண்ணே, பெ.கருணாகரன்,கண்மணிகுணசேகரன்,கடற்கரை , என்று இருவருமாக கைகோர்த்து பேச்சில் ஊரையே உலாவந்தோம். ஊர்க்காரய்ங்கள பார்த்தாலே ஒரு சந்தோஷம் தாங்க. பெ.கருணாகரன் எழுதிய காகிதப்படகில் சாகசப்பயணம் நூலினை கொடுத்து தம்பியை வழியனுப்புனேன்.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே